ststamil
Eine weitere WordPress-Website
RSS
  • Home
  • Beispiel-Seite
17903480_889424051195581_3838238320042980847_n

Apr 14 2017

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பாக நடந்தேறியது

ஏவிளம்பி தமிழ் சித்திரை புத்தாண்டு முன்னிட்டு டோட்மெண்ட் ஹொம்புறுக் நகரில் மெளலீஸ்வரம்என பெயர் விளங்கும் ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் இன்று விசேஷ ஆராதனைகளும்,விசேஷ பூஜைகளும் சிறப்பாக இனிதே நடைபெற்றது.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து இன்றய சித்திரை வருட ஆராதனையில் கலந்துகொள்ள சிவபெருமான் உள்வீதி உலாவந்து வசந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்ட கண்கொள்ளாக்காட்சியை பத்தர்கள் தரிசித்து நிற்றார்கள்

By theva • Allgemein • 0

2

Apr 14 2017

யேர்மன் சுவெற்றா ஸ்ரீகனகதுர்கா ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த ஸ்ரீகனகதுர்கா பக்தஅடியார்களே!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஸ்ரீகனகதுர்கா அடியார்கள்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

காலை   ஸ்ரீகனகதுர்காவுக்காண சிறப்பு பூசைஆரம்பமாகி ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று  ஸ்ரீகனகதுர்கா  எழுந்தருளி வீதியுலா வரும் காட்சி இடம்பெற இருக்கின்றது என்பதனை   ஸ்ரீகனகதுர்கா  அடியார்களுக்கு அறியத் தருகிறோம்
மருத்து நீர் 13/04/2017 அன்று மாலை 18.00 மணிக்கு ஆலயத்தின் பூசை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூசை நேரத்தில் பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்கள் அன்றையதினம் ஆலய குருக்களிடம் பெற்றுக்கொள்ளலாம்

By theva • Allgemein • 0

17903764_10206735910795490_5962733755663470314_n

Apr 13 2017

சுவெற்றா ஸ்ரீகனகதுர்கை ஆலயயக்குருக்கள் ‌ஐெயந்திநாத சர்மாவின் புதுவருடவாழ்த்து

இன்று „ஏவிளம்பி“ தமிழ் புதுவருஷம் பிறந்து
இருக்கும் இவ்வேளையில் உலக மக்கள் எல்லோருக்கும் ஶ்ரீகனகதுர்க்கா அம்பாளின் திருவருளுடன் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் மக்கள் எல்லோரும்
நலங்கள் பல பெற்று வாழ்க இறைவி திருவடி பணிகிறேன் வாழ்க வளமுடன் !!

Merken

Merken

By theva • Allgemein • 0

index

Apr 12 2017

டோட்முண்ட் சிவன் ஆலயத்தில் (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த சிவன் பக்தஅடியார்களே!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

சிவன் அடியார்கள்அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

காலை சிவனுக்கான சிறப்பு பூசைஆரம்பமாகி ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று சிவபெருமான் எழுந்தருளி வீதியுலா வரும் காட்சி இடம்பெற இருக்கின்றது என்பதனை சிவன் அடியார்களுக்கு அறியத் தருகிறோம்
மருத்து நீர் 13/04/2017 அன்று மாலை 18.00 மணிக்கு ஆலயத்தின் பூசை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூசை நேரத்தில் பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்கள் அன்றையதினம் ஆலய குருக்களிடம் பெற்றுக்கொள்ளலாம்

மேலதிக தொடர்புகளுக்கு ஆலய தொலைபேசி எண் 0231/72515165தொடர்புகொள்ளுங்கள்

Adresse: Kieferstraße 24, 44225 Dortmund

Merken

By theva • Allgemein • 0

17903748_1379625638784953_8537373865003694921_n

Apr 11 2017

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை !

அன்பார்ந்த வேல்முருகன் அடியார்களே!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.04.2017) தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு பூசை மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி முருகபெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி தேய்வானை சமேதராய் வீதியுலா வரும் காட்சி இடம்பெற இருக்கின்றது என்பதனை முருகன் அடியார்களுக்கு அறியத் தருகிறோம்

அன்றைய தினம் உபயகாரர்களாக விஜயசிங்கம் குடும்பம் (Slagelse ) சிறப்பிக்கின்றார்கள்

மருத்து நீர் 13/04/2017 அன்று மாலை 19.00 மணிக்கு ஆலயத்தின் பூசை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

பூசை நேரத்தில் பெற்றுக்கொள்ள வசதி இல்லாதவர்கள் அன்றையதினம் ஆலய குருக்களிடம் பெற்றுக்கொள்ளலாம்

மேலதிக தொடர்புகளுக்கு ஆலயம் -52509980 / தலைவர் அன்னலிங்கம் 22980112
செயலாளர் * இளமுருகன் – 21661604 / பொருளாளர் பவானந்தன் 21847814
ஆலய பரிபாலனம் – அம்பிகைபாலன் 91531801

இறைபணியில் ஆலய நிர்வாகசபை

Merken

By theva • Allgemein • 0

2

Apr 9 2017

யேர்மனி டோட்முண்ட் சிவன் சனிப்பிரதோஷம் பூஜைகள்08-04.17சிறப்பாக நடந்தேறியது

இன்று டோட்முண் சிவன் ஆலயத்தில் சனிப்பிரதோஷம் பூஜைகள்சிறப்பாக நடந்துள்ளது, இதில்  சிறப்பாக சாமி உள்வீதிவந்து பின்  இருப்படத்தையடை ந்து அனை த்து வழிபாட்டாளரும்       வருகை   தந்து சிவனை   தர்சித்து அவர்  அரிசணத்தை  பெ ற்று மகிழ்ந்தனர்

By theva • Allgemein • 0

Murugan

Apr 7 2017

கலியாண திருக்குமரன்கோவில் சித்திரைப்புத்தாண்டு அஷ்டோத்திர 108 சங்காபிசோக விஞ்ஞாபனம்

 

யேர்மனி பீலபெல்ட் நகரில் அமந்திருக்கும் கலியாண திருக்குமரன்கோவில் சித்திரைப்புத்தாண்டு அஷ்டோத்திர 108 சங்காபிசோக விஞ்ஞாபனம் 14.04.2017வெள்ளிக்கிழமை இடம்பெறுகின்றது,

அடியார்கள் இந்த 108 சங்காபிசோக விஞ்ஞாபனத்தில் கலந்து சிறப்பித்து முருகன் அருள்பெற வந்து வணங்குங்கள்

ஆலம் தொழுதல்

மனிதன் வாழ்வில் வாழ்வியலில்

நம்பிக்கை

 வணங்குதல்

வணங்கிநிற்ற

வாழ்வது சிறந்து நிற்கும்

Merken

By theva • Allgemein • 0

17498798_1888586478053142_4763065553953790763_n

Mrz 27 2017

கூவிடும் குயில் !கவிதை சுதர்சன்

 

காவியங்களும் உரைக்கப்படுகிறது
வரலாறுகளும் எழுதப்படுகிறது
அவை நாளைய இருப்பிற்காக
கந்தல் சேலைகளும்
கலைந்த கூந்தல்களும்
கண்ணில் படுவதில்லை
இலக்கியங்களை அலங்கரிக்க

கீச்சிடும் குருவிகளையும்
கூவிடும் குயில்களையும்
வர்ணிக்கும் மனங்கள்
வெற்று மார்முலைகளை கவ்வி
பசிக்காக அழும்
குழந்தைகளின் வரண்ட
குரல்களை நேசிப்பதில்லை

வாசனைத் திரவியம் பூசிய
பெண்ணையும்
நவீன புதுமை பெண்களையும்
தத்தெடுக்கும் பேனாக்கள்
கிழிந்த ஆடைகளையும்
ஒரு வேளை சோற்றுக்காய்
உழைக்கும் வியர்வை வாசனைகளை தத்தெடுப்பதில்லை

பெண் விடுதலை வேண்டி
முக்காரமிடும் காளைகள்
தங்கள் வீட்டு பெண்களுக்கு விடுதலை
தராமல் வீதிக்கு வருகின்றன
சமூகத்தின் விடுதலை தேடி

மரணித்த மானுடம்
நடைப்பிணங்களாய்
அலைகிறது
நஞ்சு எனும் எண்ணை ஊற்றி
நலிந்த திரிகளை பற்ற வைக்க
களங்கமற்ற நெருப்பும்
வெக்கப்பட்டு அழுகிறது
அத்தனை கொடூரங்களையும்
அதனுள் எரிக்கும் போது

ஆக்கம்  சுதர்சன்

By theva • Allgemein • 0

17553752_1580052088691288_4884197810742735106_n

Mrz 27 2017

மணப்பெண்ணின் மனசில் இருந்து தாய்க்கு !கவிதை கவிமகன்.இ

 

வினாக்களால் பின்னப்பட்ட
வாழ்க்கை பாதையில்
விடை தேடி ஓடும் நான்
என் விழிகள் தாங்கிடும்
கனவுகளை எல்லாம்
ஆழ கிளறப்பட்ட
மனக்கிடங்கில்
புதைத்து விடுகிறேன்
நீ சந்தோசிக்க வேண்டும்
என்பதற்காக…

உன் ஆசைகளை என்
முதுகில் சுமக்க
தயாராகிவிட்டேன்.
அப்போதாவது
நீ ஆசையாய் என்னை
கருவில் சுமந்த வேதனை
தீர்ந்திடும் தாயே…

நீ சுட்டும் இடத்தை
நான் சுவீகரிக்கும்
சுதந்திரத்தை
எப்போதோ உனக்காக
விட்டுக் கொடுத்துவிட்டேன்
நீ சுதந்திரமாய் என்னை
ஆளுகை செய்வதற்காக
என்னுள்ளே
செத்துவிட்ட ஆசைகளுக்கு
பூமாலை இட்டுக் கொள்கிறேன்

என்னுள் பல்லாயிரம்
வளைவுகளும் திருப்பங்களும்
அத்தனைக்கும்
கைகாட்டி நீ தான்.
உன் விரல்
சுட்டுகையோடுதான்
இதுவரை நான்
நடந்திருக்கிறேன்
இனியும் உன் சுட்டுகை
அற்று இலக்குகள்
அடையாளப்படுத்த முடியாதவை
என்பதை நீ அறிந்தே
வைத்திருக்கிறாய்

என் அடையாளத்தை
ஆக்கிரமிக்கும் அதிகாரத்தை
நீயே வைத்துக்கொள்
நான் தட்டிப்பறிக்க மாட்டேன்
கானல் நீரான காலங்களை
நான் கடந்து வந்த போது
உன் சிறகுக்குள் தான்
காக்கப்பட்டேன்.

இப்போதும் உன் சிறகுக்குள்
விடுபடக்கூடாதென்ற
உன் விருப்பத்துக்காய்
உனக்குள்ளே முடங்கி போகுறேன்
உனக்காக என் சிறகுகளை
கொய்துவிட்டு
பறக்க முடியாத பறவையாய்
நான் உனக்குள்ளே
புதைந்து போகிறேன்.

ஆனாலும் தாயே…
„எனக்காக“ என்ற
ஒற்றை சொல்லில்
ஆளரவமற்ற
ஆடம்பரத்துக்குள்
என்னைத் தொலைத்துவிடாதே
அதிக ஆசைகளை
தொலைத்தவள் நான்
பசுமைகளை விட
பாலைவனங்களை கடந்து
வந்தவள் நான்
„உனக்காக“ என்ற
மற்ற சொல்லில்
என்னை தொலைக்க
நான் தயங்க மாட்டேன்.

பசுங்காற்று வீசும்
நிலவொளி ஒன்றில்
பழமைகளற்ற புதுமையோடு
நீ புன்னகைக்க வேண்டும்
என்றே நான் விரும்புகிறேன்
ஆனால்…
நீயோ உன் புன்னகை
கரிய இருளின் காற்றோடு
கலக்க வேண்டும் என்கிறாய்…
நான் உன் புன்னகைக்காக
அந்த கரிய இருளுக்குள்ளும்
வெளிச்சமிட்டபடி
நடப்பேன் தாயே…
ஏனெனில் அதையும்
நீயே கற்றுத் தந்தாய்…

கவிமகன்.இ

By theva • Allgemein • 0

Mrz 27 2017

Hallo Welt!

Willkommen zur deutschen Version von WordPress. Dies ist der erste Beitrag. Du kannst ihn bearbeiten oder löschen. Und dann starte mit dem Schreiben!

By theva • Allgemein • 0

«< 39 40 41 42 43

STSLivetv


டோட்முண்ட் சிவன் ஆலயத்தின் 7வது கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்

யேர்மனியில் ஹம் காமாட்சி அம்பாள் 9வது திருவிழா 20.06.17

↑

© ststamil 2021
Powered by WordPress • Themify WordPress Themes